இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image 16 Thavvam

நேற்று இந்தோனேசியாவின் ஜாவா தீவின் வடக்குக்கடலோரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Earthquake

குறித்த இந்த நிலநடுக்கமானது நேற்று (24-03-2024) அதிகாலையில் உணரப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாரவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்க நிகழ்வால் உயிா்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும், நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *