Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையே இந்த முடிவுக்கு காரணம் என்று அமித் ஷா கூறினார்.
லடாக் (ladakh) யூனியன் பிரதேசத்தில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார்.
அமித் ஷா தனது X தள பதிவில், புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை அவர்களின் வீட்டு வாசல் வரை கொண்டு செல்ல முடியும் என்று கூறினார்.
வளர்ந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையே இந்த முடிவுக்கு காரணம் என்று அவர் கூறினார்.
இந்த புதிய மாவட்டங்களாவன – ஜான்ஸ்கார், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங்” (Zanskar, Drass, Sham, Nubra and Changthang)
லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது” என்று ஷா X இல் பதிவிட்டுள்ளார்.
லடாக்கில் தற்போது லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. இரண்டு மாவட்டங்களும் அவற்றின் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்களைக் கொண்டுள்ளன, அவை அவற்றை நிர்வகிக்கின்றன.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, லடாக்கில் மொத்தம் ஏழு மாவட்டங்கள் இருக்கும்.
2019 வரை லடாக் பகுதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த ஆண்டு மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
லடாக் உலகின் மிகவும் பிரபலமான இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இது இருசக்கர வாகனங்கள் மூலம் தொலைதூர பயணம் செய்ய விரும்புவோர் பயணம் செல்லும் இடமாகவும் உள்ளது. உலகின் மிக உயரமான சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அம்மலைகளுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் சமீபத்திய சீன ஆக்கிரமிப்பின் பகுதி என்பதால் லடாக் மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமானது.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்