கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது எதிர்வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் திருவிழா பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளரான வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மீன்பிடி தொழிலாளர்களின் விசைப்படகு தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பயணிகளை அழைத்துச்செல்ல முடியாததால் கச்சத்தீவுத் திருவிழா ரத்து செய்யப் படுவதாகவும், இவ் விழாவில் இந்திய பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்
உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus