‘இது போருக்கான நேரம் இல்லை’: உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, போலந்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து

image 24 Thavvam

பிரதமர் நரேந்திர மோடி, போலந்து தலைநகர் வார்சாவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். பல தசாப்தங்களாக, இந்தியா அனைத்து நாடுகளிலிருந்தும் சற்று தூரத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது என்று மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கியமான உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, புதன்கிழமை தெரிவிக்கையில், கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதிக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார். ஏனெனில் அவர் “இது போருக்கான கால சகாப்தம் அல்ல” என்றும் எந்த மோதலும் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

image 24 Thavvam
போலந்தின் வார்சாவில் உள்ள நவாநகரின் “நல்ல மகாராஜா” என்று போற்றப்படும் ஜாம் சாஹிப் அவர்களுக்கு புதன்கிழமை மலர்கள் சாற்றும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.(AP)

அனைத்து நாடுகளிலிருந்தும் சற்று தூரத்தை பராமரிக்கும் கொள்கையை இந்தியா கொண்டுள்ளது என்றார். இருப்பினும், இன்றைய இந்தியாவின் கொள்கை, அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இருப்பதுதான், மோடி-மோடி என்ற கோஷங்களுக்கு மத்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார், பச்சாதாபமும் இரக்கமும் இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டிலும் எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான்… கோவிட் வந்தபோது, ​​மனிதநேயத்தை முதலில் சொன்னது இந்தியா…மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா உதவுகிறது.

இந்தியா புத்தரின் பாரம்பரியத்தை கொண்டது, அதை நம்புகிறது, எனவே, போரை அல்ல சமாதானத்தை நம்புகிறது… இந்தியா இந்த பிராந்தியத்தில் அமைதிக்கான ஆதரவாளராக உள்ளது, இது போருக்கான நேரம் அல்ல என்பது வலியுறுத்துகிறது.

சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தியா ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்துகிறது” என்று மோடி தனது போலந்து பயணத்தின் போது கூறினார்.

1991 ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரமடைந்த பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர், உக்ரைனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள மோடி, தற்போது நடைபெற்று வரும் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது குறித்து உக்ரைன் தலைவருடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் அதன் சார்பான சில மேற்கத்திய நட்பு நாடுகளின் விமர்சனத்தைக் கிளப்பிய, ரஷ்யாவுக்கான தனது உயர்மட்ட பயணத்திற்குப் பின்னர், கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு மோடி உக்ரைனுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இன்றைய இந்தியா அனைவருடனும் இணைய விரும்புகிறது. இன்றைய இந்தியா அனைவரின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. இன்றைய இந்தியா அனைவருடனும் உள்ளது, அனைவரின் நலன்களையும் பற்றி சிந்திக்கிறது” என்று மோடி புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் கூறினார்.

பிரதமர் மோடியின் போலந்து பயணம் கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும்.

2022 இல் போர் வெடித்தபோது உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களுக்கு உதவிய இந்திய சமூக உறுப்பினர்களையும் மோடி பாராட்டினார்.

இந்திய மாணவர்களுக்கு கதவுகளைத் திறந்து விசா கட்டுப்பாடுகளை நீக்கியதற்காக போலந்து அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

“உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களுக்கு நீங்கள் உதவி செய்தீர்கள். நாம் அனைவருமே அதற்கு சாட்சியாக இருக்கிறோம். நீங்கள் அவர்களுக்கு நிறைய உதவிகள் செய்தீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டுக் கதவுகளை அவர்களுக்காகத் திறந்தீர்கள், வந்தவர்களுக்கு எல்லாம் உணவு ஏற்பாடு செய்தீர்கள். அந்த அவசர காலத்தில் இ்ந்திய மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை போலந்து அரசு நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போலந்து, அவர்களின் முழு மனதுடன், எங்கள் மாணவர்களுக்கு அவர்களின் கதவுகளைத் திறந்தது. இன்றும் உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களை நான் சந்திக்கும் போது, ​​அவர்கள் உங்களையும் போலந்து அரசையும் பாராட்டுகிறார்கள். இன்று 140 கோடி இந்தியர்கள் சார்பாக போலந்து அரசு மற்றும் மக்கள் அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்” என்று மோடி கூறினார்.

இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்கள் குறித்து பேசிய மோடி, “இந்தியா ஜனநாயகத்தின் தாய் மட்டுமல்ல, இது ஒரு துடிப்பான ஜனநாயகத்துக்கான பங்களிப்பு வழங்குகிறது. இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கையை சமீபத்திய தேர்தல்களிலும் பார்த்துள்ளோம். இது வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல். சமீபத்தில் ஐரோப்பிய யூனியனில் நடைபெற்ற தேர்தலில் 180 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதைவிட மூன்று மடங்கு அதிகமான மக்கள், 640 மில்லியன் வாக்காளர்கள் இந்தியாவில் தேர்தலுக்கு வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *