டி 20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக டிரினிடாட் பிரதமர் கருத்து

image 4 edited Thavvam

எதிர்வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூடுதல் பாதுகாப்புடன் சூழலை கையாள வேண்டும் எனவும் டிரினிடாட் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் போர்ட் (Port of Spain) , டி 20 உலகக் கோப்பைThe T20 World Cupஅமெரிக்காவும் மற்றும் மேற்கிந்திய தீவுகளும் உடன் இணைந்து நடத்தவுள்ள இப்போட்டிகள் பயங்கரவாத அச்சுறுத்தலைப் பெற்றுள்ளது, என்று டிரினிடாட்டின் பிரதமர் டாக்டர் கீத் ரோவ்லி (Trinidad’s Prime Minister Dr Keith Rowley) வெளிப்படுத்தியுள்ளார், ஆனால் “தேசிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருத்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் (extra effort in national security preparations and response readiness)” ஆபத்தான இச்சூழலை பாதுகாப்பாக கையாள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

FADqIBhUYAoNai0 1 Thavvam
Trinidad’s Prime Minister Dr Keith Rowley

இந்தியா உட்பட 20 அணிகள் இடம்பெறும் போட்டிகள் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளன. இப்போதைக்கு ஊடக அறிக்கையின்படி இந்த அச்சுறுத்தல், மேற்கிந்தியத் தீவுகளுக்காக குறிப்பிட்டுள்ளது, சில பூர்வாங்க போட்டிகளைத் தவிர, முழு சூப்பர் 8 கட்டத்தையும் , அரையிறுதி மற்றும் ஜூன் 29 அன்று நடக்கும் இறுதிப் போட்டியையும் மேற்கிந்தியத் தீவுகள் நடத்துவது குறிப்பிடத்தக்கது.

“துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் என்பது அதன் பல்வேறு வகைகளில் மற்றும் மாறுபட்ட வெளிப்பாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் உலகில் எப்போதும் இருக்கும் ஆபத்து” என்று ரோவ்லி மேற்கோள் காட்டினார், என்று ‘டிரினிடாட் டெய்லி எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Cricket images bat ball

ரவ்லி குறிப்பாக எந்தவொரு அமைப்பையும் பெயரையும் வெளியிடவில்லை, ஆனால் ஐ எஸ் (Islamic State) அமைப்பு தனது பிரச்சார சேனலின் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

“இந்த பின்னணியில் தான், எங்கள் பிராந்தியத்தைப் போலவே, பெரிய அல்லது பாதிக்கப்படக்கூடிய கூட்டங்களை நடத்தும் போது, தேசிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருத்தல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் அனைத்து அச்சுறுத்தல்களும், வெளிப்படுத்தப்பட்டது அல்லது மறைமுகமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

ஒன்பது இடங்களில் நடைபெறுகிற இந்த நிகழ்வில், ஆறு மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறும், அவ்வாறு நடைபெறும் நாட்களில் அங்கு பாதுகாப்பு மீறல் இல்லை என்பதை உறுதிப்படுத்த போட்டிகள் நடைபெறும் காலம் வரை உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று ரோவ்லி கூறினார்.

“மோசமான செயல் செய்பவர்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்யலாம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, எதிர்பாராத வகையில் எந்த ஒரு நிகழ்வும் நடக்கும் வாய்ப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்றும் அவர் கூறினார்.

“இருப்பினும், இந்த ஆபத்துக்களை சரிசெய்ய, உள்ளூர் மற்றும் பிராந்திய மட்டங்களில் நாங்கள் பலவகையான அச்சுறுத்தல்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கிறோம், மேலும் தனித்தனியாக அல்லது ஒன்றாக எங்கள் உளவுத்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் மற்ற நாடுகளிலும், போட்டிகள் நடைபெற உள்ள இடங்களிலும் மக்களைப் பாதுகாக்க வேலை செய்கின்றன,” என்றார்.

மேற்கிந்திய தீவுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகள் ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், கயானா, செயிண்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய இடங்களில் நடைபெறும். அமெரிக்காவின் சார்பில் புளோரிடா, நியூயார்க் மற்றும் டெக்சாஸில் விளையாட்டுகள் இடம்பெறும்.

நியூயார்க்கில் ஜூன் 9 அன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது.

“நாங்கள் போட்டி நடத்தும் நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம், மேலும் எங்கள் நிகழ்வுக்கு அடையாளம் காணப்பட்ட அபாயங்களைத் தணிக்க பொருத்தமான திட்டங்கள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த உலகளாவிய நிலப்பரப்பை தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்கிறோம்,” என்று சி.டபிள்யூ.ஐ (CWI) தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ்ஸ் ‘கிரிக்பஸ்’ (CRICBUZZ) க்கு கூறினார்.

“ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கோப்பையில் உள்ள அனைவரின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது என்று அனைத்து பங்குதாரர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம், மேலும் எங்களிடம் ஒரு விரிவான மற்றும் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

Read in English: https://www.hindustantimes.com/cricket/theres-terror-threat-to-t20-world-cup-reveals-trinidad-pm-101714977484556.html

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *