ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கடற்படைத் தளபதி

image 18 Thavvam

முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப் பிரதானியுமான அட்மிரல் தயா சந்தகிரி கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவைச் சந்தித்து அவர் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகர்

மேலும் இவர், கட்சியின் கடல் சார்ந்த மற்றும் கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தயா சந்தகிரி இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் கடந்த மாதம் 29ஆம் தேதி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image 18 Thavvam
Credits: ibc tamil


மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *