செங்கடலில் தொடரும் பதட்டம்..! பொருளாதார ரீதியில் பாதிப்பை சந்திக்கும் இந்து மாக்கடல்

image 23 Thavvam
சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

செங்கடலில் நிலவும் ஆபத்தான நிலைமை உட்பட பல்வேறு காரணங்களால் இந்து மாக்கடல் பகுதி பொருளாதார பலவீனங்களை எதிர்கொள்வதாக சிங்கப்பூர் நாட்டின் வெளி விவகாரங்களுக்கான அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழாவது இந்துசமுத்திர மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் கடற்பயணங்களுக்கு சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செங்கடலில் தாக்குதல்

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் சமீபத்தைய தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவாக முக்கிய கடல்பாதைகளிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் அதன்காரணமாக இந்து சமுத்திரத்தில் எண்ணெய் மற்றும் கொள்கலன் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய ஆபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்து மாக்கடலின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், குறிப்பாக செங்கடலில் ஹோர்மஸ் நீரிணையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உலகின் முக்கிய வர்த்தக மையமான சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், சுதந்திரமான கடற்பயணத்தின் சட்டரீதியான மற்றும் பொருளாதார ரீதியான முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டியுள்ள சிங்கப்பூர் அமைச்சர் அனுமதியின்றியும் வாடகையின்றியும் கப்பல்கள் பயணம் செய்ய அனுமதிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *