ருவாண்டாவை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடந்த பிரித்தானியா திட்டம்!

image 1 Thavvam

நீதிமன்ற தீர்ப்பு, தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்புகள் என்று பல்வேறு தடைகளை தாண்டி, எப்படியேனும் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பிரித்தானிய அரசு.இந்த சூழலில், பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 30,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் இருப்பதாக, மூத்த உள்துறை அலுவலர் ஒருவர் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

image 1 Thavvam

அபாயத்தில் 30,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்

33,085 பேர், பிரித்தானியாவுக்குள் அனுமதியின்றி சட்ட விரோதமாக நுழைந்திருப்பதாகவும், அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என்ற தகவலை, முதன்முறையாக, உள்துறை அலுவலகத்தின் புலம்பெயர்தல் மற்றும் எல்லைகள் பிரிவின் பொது இயக்குனர் (Director general) Dan Hobbs தெரிவித்துள்ளார். அவர்களை நாடுகடத்த பிரித்தானிய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது!

மாயமாகும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

இதற்கிடையில், தங்களுக்கு அங்கு புகலிடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த கோரிக்கையாளர் பலர் தலைமறைவாகிவருவதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரசின் இத்தகைய திட்டங்கள், எளிதில் ஆபத்துக்குள்ளாகும் அபாயத்திலிருக்கும் மக்களுக்கு மேலும் கவலையையும் துயரத்தையும் கொடுக்கின்றன என்பதுதான் யதார்த்தமான உண்மை என்கிறார்.

image Thavvam
Credits: House of Commons / PA

Refugee Council அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலரான என்வர் சாலமன் (Enver Solomon) என்பவர்.நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள் விவகார தேர்வு குழுவினரை சந்தித்து அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்த உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவர்லியிடம், புகலிடக்கோரிக்கையாளர்கள்எத்தனை பேர் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நபர்களின் எண்ணிக்கை என்று வரையறை எதுவும் செய்யப்படவில்லை, ஆனாலும், அந்த எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என்றார்.

->

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

உங்கள் நிறுவனத்துக்கு தேவையான Website, Software சிறந்த முறையில் செய்திட தொடர்பு கொள்ளுங்கள் contactus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *