உலகளவில் COVID-19 தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா (AstraZeneca) அறிவிப்பு

image 9 Thavvam

அஸ்ட்ராஜெனிகா நிறுவனம்(AstraZeneca), செவ்வாயன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொற்றுநோய்ப் பரவலுக்குப் பிறகு “சந்தையில் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் உபரியாக கிடைப்பதன் காரணமாக” தங்கள் நிறுவனத்தின் COVID-19 தடுப்பூசியை உலகளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

ஐரோப்பாவிற்குள் வேக்ஸ்செவ்ரியா(Vaxzevria)தடுப்பூசியின் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தையும் (marketing authorizations) திரும்பப் பெறுவதாக நிறுவனம் கூறியுள்ளது.

Vaccine side effects
தடுப்பூசி உதாரண படம்

“பல்வேறு மாறுதல்களுடன் அடுத்தடுத்த கோவிட்-19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதால், புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் உபரியாக உள்ளது,” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது, இது வேக்ஸ்செவ்ரியாவின் தேவை குறைவதற்கு வழிவகுத்தது, இது இனி தயாரிக்கப்படவோ அல்லது வழங்கப்படவோ மாட்டாது என்றும் அறிவித்துள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, ஆங்கிலோ-ஸ்வீடிஷ் மருந்து தயாரிப்பாளரான இந்நிறுவனம், முன்பு நீதிமன்ற ஆவணங்களில் இத்தடுப்பூசி இரத்த உறைவு மற்றும் குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஒப்புக்கொண்டது சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது.

Covid vaccine
தடுப்பூசி உதாரண படம்

தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான அந்நிறுவனத்தின் விண்ணப்பம் மார்ச் 5 அன்று செய்யப்பட்டது மற்றும் மே 7 முதல் நடைமுறைக்கு வந்தது என்று டெலிகிராப்(The Telegraph) பத்திரிகை தெரிவித்துள்ளது.

லண்டனில் பட்டியலிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது, கடந்த ஆண்டில் கோவிட்-19 மருந்து விற்பனை குறைந்ததால், அதன் வளர்ச்சி மந்தமடைந்த பிறகு, கடந்த ஆண்டில் பல ஒப்பந்தங்கள் மேற்கொண்டு அதன்மூலம் சுவாச ஒத்திசைவு வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் உடல் பருமனுக்கான மருந்துகளுக்கு செல்லத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *