Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
ஷிகர் தவான் கூறுகையில் “மீண்டும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதில் வருத்தமில்லை, ஆனால் இந்தியாவுக்காக இவ்வளவு காலம் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக பல போட்டிகளில் களம் கண்ட ஷிகர் தவான், சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
38 வயதான தவான் தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்ட காணொளியில், “இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, எனக்கு நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளன.”
“எனக்கு ஒரே ஒரு கனவு இருந்தது, அது இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே, நான் அதை அடைந்தேன். எனது பயணத்தில் பங்களித்த பலருக்கு நான் நன்றி கூறுகிறேன். முதலில் என் குடும்பம். எனது சிறுவயது பயிற்சியாளர் லேட் தாரக் சின்ஹா மற்றும் மதன் ஷர்மா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நான் விளையாட்டின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன்.
“நான் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடிய எனது அணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதன்மூலம் எனக்கு இன்னொரு குடும்பம் கிடைத்தது, மேலும் அதனால் எனக்கு பெயர், புகழ் மற்றும் ரசிகர்கள் அனைவரின் அன்பும் கிடைத்தது.“
முழுக் கதையையும் படிக்க பக்கத்தைத் திருப்ப வேண்டும் என்று ஒரு பழமொழி உண்டு. அதைத்தான் நான் செய்யப் போகிறேன். சர்வதேச மற்றும் உள்நாடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்.
இந்தியாவுக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் (ODI) மற்றும் 68 T20 போட்டிகளில் விளையாடியுள்ள தவான், 2004ல் முதல் தர போட்டியில் அறிமுகமானதில் இருந்து 20 ஆண்டுகள் நீடித்துள்ளார்.
நான் எனது விளையாட்டு வாழ்வின் நேரத்தை நினைக்கும்போது, நான் நாட்டிற்காக அதிகம் விளையாடியதால் நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் டிடிசிஏவுக்கு (BCCI and DDCA) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்களாக என் மீது மிகுந்த அன்பைக் கொடுத்த ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“இந்தியாவை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று வருத்தப்பட வேண்டாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன், ஆனால் இதுவரை விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு காலம், என்னைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு நான் விளையாடியதுதான் பெரிய விஷயம்.
ஷிகர் தவான் கடைசியாக 2022 ஆம் ஆண்டு சட்டோகிராமில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச ஆட்டத்தில் பங்கேற்றார். ஷிகர் தவானின் கடைசி போட்டி ஆட்டம் இந்த ஆண்டு ஐபிஎல்லில் அவர் ஏப்ரல் 2024 இல் பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தியபோது வந்ததாகும்.
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்