Location
Crafted with ❤️ from United Kingdom
Location
Crafted with ❤️ from United Kingdom
Parenting tips best 10 “பெற்றோருக்கான 10 சிறந்த ஆலோசனைகள்”
பெற்றோராக இருப்பது ஒரு பெரிய பொறுப்பும், அடுத்த தலைமுறையை கட்டமைக்கும் புனிதக் கடமையும் ஆகும். குழந்தைகளைக் கண்காணிப்பதும், வளர்ப்பதும் ஒரு கலை, அதேசமயம் அது ஒரு அறிவியல் என்று கூடச் சொல்லலாம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு எப்போதும் சிறந்ததையே செய்ய விரும்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில் எப்படி என்று தெரியாமல் குழப்பமடைவதுண்டு.
குறிப்பாக குடும்ப பெரியவர்கள் உடன் இல்லாமல், பணி நிமித்தமாக நகர்ப்புறங்களில் முதல் குழந்தையுடன் குடியேறும் இளம் பெற்றோர் பணிச்சுமைக்கும் குழந்தை குடும்ப பொறுப்பு க்கும் இடையில் மிகவும் தடுமாறுவதைக் காண முடிகிறது.
கீழே குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்ல பண்புகளுடனும் வளர்க்க பெற்றோர்களுக்கான 10 பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன:
குழந்தைகள் அன்பினால் மலர்கிறார்கள். அவர்களது சிறு வெற்றிகளையும் பாராட்டுங்கள். “நீங்கள் சிறந்த வேலை செய்தீர்கள்” போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரும். உங்கள் அரவணைப்பை எப்போதும் காட்டுங்கள். சிறு சிறு விடயங்கள் கூட உங்கள் மீதான நம்பிக்கையை குழந்தைகள் மனதில் விதைக்கும். தவறு செய்தால் கூட அவற்றை முதலில் அன்புடன் எடுத்துரையுங்கள். இவ்வாறு செய்தால் விளைவு இவ்வாறு இருக்கும் போன்ற வார்த்தைகள் மூலம் நல்லது கெட்டதுகளை வேறுபடுத்தி செயல்படும் புரிதலை குழந்தைகள் மனதில் உருவாக்குங்கள்.
குழந்தையுடன் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் செலவிட முயற்சிக்கவும். அவர்களுடன் விளையாடுங்கள், கதைகள் பேசுங்கள், படம் வரையுங்கள், வெளியே அழைத்துச் செல்லுங்கள் அல்லது அவர்கள் விரும்பும் எதாவது ஒரு செயலில் நீங்கள் அவர்களுடன் கலந்துகொள்ளுங்கள். இது குழந்தைகள் மனதில் உங்கள் உறவை உறுதிப்படுத்தும். தொடர்ந்து அவர்கள் உங்களுடன் இணைந்திருக்க விரும்புவார்கள். இவ்வாறான செயல்கள் மூலமே அவர்கள் உங்களுடைய அரவணைப்பை உணர்வார்கள். குறிப்பாக குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள். அவர்கள் தங்கள் மனதில் வரும் கேள்விகளையும் தமக்கு புரியாத விடயங்களையும் பெற்றோரிடம் கூறி தெளிவுபெறவே விரும்புகிறார்கள்.
அவர்கள் ஏற்கனவே உலக நடப்புகளை அவர்களின் சிந்தனைக்கு வரும் விடயங்களைக் கொண்டு தாமாக நல்லது-கெட்டதுகளை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்நேரத்தில் பெற்றோர் விதிக்கும் மிகுந்த கட்டுப்பாடுகள் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கலாம். குழந்தைகள் அதனை விரும்புவதில்லை. ஒருசில சமயங்களில் அவர்களை தானாக முடிவெடுக்க விடுங்கள். அதன் சாதக பாதகங்களை விளக்குங்கள்.
நேரம் மற்றும் நேரம் கருதிய செயல்பாடுகள் தான் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது. குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம், ஓய்வு, விளையாட்டு என அவர்களது அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான ஒழுங்கான கால அட்டவணை அமைத்துக் கொடுக்கவும். அதனைப் பின்பற்றி செயல்பட பழக்கப்படுத்தவும். இதுவே எதிர்காலத்தில் அவர்களது பொறுப்புணர்வுக்கு அடித்தளம் அமைக்கும்.
Parenting tips best 10
குழந்தைகள் பெற்றோர்களைக் கவனிக்கிறார்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள், உங்களது நடத்தை ஆகியவை அவர்களைக் பாதிக்கும் நேரடியான காரணியாகும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களுக்கு ஒரு பாடமாக மாறும். அதனைப் பின்பற்றியே அவர்களது சாதாரண செயல்பாடுகள் மாற்றமடைவதை நாம் காண இயலும். எனவே பெற்றோர் தம் நற்செயல்களால் குழந்தைகளை மறைமுகமாக வழிநடத்த வேண்டும்.
அவர்கள் வயதுக்கு ஏற்ப கருத்துகளை சொல்வார்கள். அது அவர்கள் பார்க்கும் கேட்கும் விடயங்கள், அவர்கள் பெறும் அனுபவங்கள், அவர்களது சிந்தனைகள் புரிதல்கள் உள்ளுணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும். ஆனால் அவை சாதாரணமாக தோன்றினாலும் அதை செவிசாய்த்து கேட்கவும். இது அவர்களுக்கு மதிப்பு என்ற உணர்வை தரும். பிறகு அவற்றின் நடைமுறையை நன்மை தீமையை முடிவெடுக்கும் நுணுக்கங்களை குழந்தைகளுக்கு புரிய வைக்கவும்.
அவர்கள் தவறுகள் செய்தால் உடனே சினமாகப் பழிக்க வேண்டாம். அதற்கு மாற்றாக, ஏன் அது தவறு, இச்செயல்பாடு காரணமாக என்ன எதிர்வினை வரும் என்பதை அமைதியாக விளக்குங்கள். அதனை அவர்கள் சிந்தனைக்கு எட்டும் வகையில், அவர்கள் மனதார ஏற்கும் வகையில் கூறுங்கள். பெரும்பாலும் குழந்தைகள் தமது அறியாமையால் தான் ஏதாவது விபரீத செயல்கள் செய்து விடுகிறார்கள். எனவே உலக நடப்பு சூழல் மற்றும் நன்மை தீமைகளை பெற்றோர் தான் குழந்தைகளுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை உண்டு. அது ஓவியம், இசை, விளையாட்டு அல்லது கணிதம் எதுவாக இருந்தாலும், அந்தத் திறமையை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இயல்பாக அவர்கள் எதில் சிறந்து விளங்குகிறார்களோ அத்துறையில் அவர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள அனுமதித்தால் அவர்கள் உயர்நிலையை அடைய வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக “இது செய்யக்கூடாது” என்ற கட்டுப்பாடுகள் மட்டும் போதாது. ஏன் செய்வது தவறு, அதன் விளைவுகள் என்ன என்பதையும் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். தவறு என்றால் என்ன என்பதை குழந்தைகள் உணரும்படி நாம் விளக்க வேண்டும். அச்செயலை அவர்களாக தவிர்க்கும்படி பெற்றோர் வழிநடத்த வேண்டும்.
பிள்ளைகளை வளர்க்கும் ஒவ்வொரு நாளும், அவர்களின் குறும்புகளை கையாளும் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு புதிய அனுபவம் பெறுகிறீர்கள். உங்கள் மனநிலையை, பொறுமையை, புரிதலை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முதலீடாக இருக்கும். பெற்றோர் தம் பணிநேர மன அழுத்தம் புறச்சூழல் போன்ற விடயங்களின் கோப உணர்வுகளை குழந்தைகளிடம் வெளிப்பட்டு விடாமல் தவிர்க்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு நாம்தான் உலகம். அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வயதும் பக்குவமும் பெறும்வரை நாம்தான் பொறுமையாக அவர்களை சரியாக அனுசரித்து விட்டுக்கொடுத்து சரியான புரிதலை ஏற்படுத்தி வழிநடத்த வேண்டும். அதுவே பெற்றோராக அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் முதலீடு ஆகும்.
குழந்தைகளை வளர்ப்பது சவாலானதொரு பயணம். ஆனால் மனதார அன்பும், சிந்தித்து செயல்படும் பொறுமையும் நாம்தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் அது இனிமையானதாக மாறும். இத்தகைய ஆலோசனைகளை நடைமுறையில் பயன்படுத்தி, ஒரு அற்புதமான பெற்றோர்களாக அடுத்த சந்ததியினரை நல்வழியில் நடத்த வாழ்த்துகிறோம்!
Parenting tips best 10
எமது வலையொளி: thavvammedia/YouTube
மேலும் செய்திகளுக்கு thavvam news || தவம் செய்திகள்